Saturday, December 25, 2010

kulanthaigalai kondaduvom

அதிகாலை
பரபரப்பு  பயணத்திலும்
கண் விழிக்கும்  முன்னே
அம்மா
கையில்  திணித்துவிட்டுப் போன
மிட்டாய்....

அலுவலகம்  முடிந்து
அவசர அவசரமாய்  வாங்கினாலும்
பேருந்து நெரிசலிலும்  கசங்காமல்
அம்மா கொண்டுவந்து  கொடுத்த
ஆயத்தப் புத்தாடை..

நள்ளிரவு  தாண்டி வந்தாலும்
மறக்காமல்
அப்பா  வாங்கிவந்த
மரக்காச்சி பொம்மை...

துள்ளிக்  குதிக்க விடாமல்
பள்ளி  வளாகத்துக்குள்
ஆசிரியர்கள்
அள்ளித்  தெளித்த
வாழ்த்துரைகள்...

எங்களைக்  கொண்டாடாத
இவை  எதனோடும்
கொண்டாட  முடியவில்லை
குழந்தைகள்  தினத்தை.

குழந்தைகள்  தினத்துக்கு
விடுமுறை  வேண்டாம்
விடுமுறை  தினத்தில்  வரட்டும்
குழந்தைகள்  தினம்!

Sunday, December 5, 2010

ஆசைப்படுகிறது மனது
அச்சப்படுகின்றன கால்கள்   
பசைப்புல்வெளியில் நடக்க.



மரங்கொத்திக்குத் தெரியுமா
மரத்தின்
உயிர் வலி?


பசி
பொது
உணவு?

maudhal kavidhai

காசு கொடுத்ததும்
கவிதை சொல்வேன்
ரசிக்கும் இதயங்களுக்கு மட்டும்.........